இன் சொல்லாடல்
இன் சொல்லாடல்
இன் சொல்லாடல் என்பது இந்திரி ஒழுக்கம் என்ற தலைப்பில் வள்ளல் பெருமான் கூறிய ஒழுக்கங்களில் ஒன்றாகும்.
இன் சொல்லாடலின் முக்கியத்துவத்தை இந்த பதிவில் நாம் விரிவாக பார்க்க போகின்றோம்.
பொதுவாக இன்சொல்லாடல் என்றால் என்ன?
இனிமையான சொற்க்களை மட்டுமே பயன்படுத்துவது
ஏன் கசப்பான தீய சொற்களை பயன்படுத்தக்கூடாது?
நமக்கு கோபம் வரும் பொழுது எப்படி நமது உணர்வை வெளிப்படுத்துவது?
அந்த இடத்தில் தீயசொற்க்கள் தானே ஏதுவானதாக இருக்கும்.
இதுவே பொதுவான மக்களின் கருத்து.....
உங்களின் மனதில் இந்த ஒன்றை மட்டும் நிலை நிறுத்தி கொள்ளுங்கள்
இந்த உலகம் ஈர்ப்பு விதியின் படி தான் இயங்கிக் கொண்டிருக்கிறது
இப்படி இருக்கும் பொழுது தீய சொற்களை நீங்கள் உள்ளிருந்து கொண்டு வரும்போது
உங்களை சுற்றித் தீய விஷயங்கள் மட்டுமே நடக்கும்
உங்களுக்குள் எது இருக்கிறதோ அதுவே உங்களை சுற்றி நடக்கும்
இதில் மிகப்பெரிய சூட்சமம் என்னவென்றால் நீங்கள் மற்றவரிடத்தில் பேசும் பொழுது மட்டும் அல்ல
நீங்கள் தனியாக இருந்து சிந்தித்துக் கொண்டிருக்கும் பொழுதும் கூட இந்த இன்சுலாடலை பின்பற்ற வேண்டும்
இதனை கேட்கும் பொழுது உங்களுக்கு கடினமாக இருக்கலாம்
ஆனால் உங்களுக்கு நன்மை உண்டாக வேண்டும் என்றால் நீங்கள் இதனை கடைப்பிடித்தே ஆகவேண்டும்
ஒரு ஞானியிடம் சீடர் ஒருவர் கேட்டாராம் சொர்க்கம் எங்கிருக்கிறது என்று?
அன்பு உள்ளம் கொண்டவர்களின் இதயம் தான் சொர்க்கம் - என்றார் ஞானி
எனில் நரகம் என்பது என்ன என்று கேட்டார் சீடர்
தீய எண்ணங்கள் என்று பதில் அளித்தார் ஞானி.....
Comments
Post a Comment